Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசுப் பேருந்தில் நடத்துனரை தாக்கிய நெல்லை ஆயுதப்படை காவலர்கள் கைது

செப்டம்பர் 30, 2019 03:44

நெல்லை: நாகர்கோவில் அரசுப் பேருந்தில் நடத்துனரை தாக்கிய காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த காவலர்கள் தமிழரசன், மகேஷ் ஆகியோரை டிக்கெட் கேட்ட நடத்துனர் ரமேஷை தாக்கியுள்ளனர். 

நடத்துனர் ரமேஷை நெல்லை ஆயுதப்படை காவலர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து நடத்துனர் தாக்குதல் குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் மகேஷ், தமிழரசனை கைது செய்தனர். 

தலைப்புச்செய்திகள்